Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்த சோயிப் அக்தர்!

ஐபிஎல் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரீசிகர்கள் பார்த்து வரும் நிலையில், இளம் வீரர் ஒருவருக்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 06, 2022 • 18:42 PM
Shoaib Akhtar Names Player Who Should Have Played More Games For India
Shoaib Akhtar Names Player Who Should Have Played More Games For India (Image Source: Google)
Advertisement

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் சாஞ்சு சாம்சன், ஐபிஎல் மற்றம் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். இதுவரை 124 ஐபிஎல் போட்டியில் விளையாடி 3161 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள், 16 அரைசதங்களும் அடங்கும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் அதிக போட்டியில் விளையாடி இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டிலேயே ஒரு சிறந்த வீரராக சஞ்சு சாம்சன் விளங்குவதாக பாராட்டு தெரிவித்த சோயிப் அக்தர்,

Trending


எனினும் அவரால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனது அவரின் துரதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது என்று சோயிப் அகத்ர் பாராட்டியுள்ளார். சஞ்சு சாம்சன் இது வரை இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 13 டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

சஞ்சு சாம்சன் கடைசியாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கினார். அதில், 39 ரன்களும், 18 ரன்களும் அடித்திருந்தார். சஞ்சு சாம்சனிடம் அதீத திறமை இருக்கிறது. ஆனால் அவருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் சஞ்சு சாம்சன் போல் விளையாடக் கூடியவர் தேவை.

இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து இடம் கொடுத்து நம்பிக்கை அளிக்க முயற்சி செய்வேன் என்று கேப்டன் ரோகித் சர்மா அன்மையில் கூறியிருந்தார். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement