Advertisement

பாக்.,பயிற்சியாளர்கள் ராஜினாமா செய்தது குறித்து ஷோயப் அக்தரின் கருத்து!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்தது குறித்து ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 07, 2021 • 11:46 AM
Shoaib Akhtar On Misbah And Waqar’s Resignation
Shoaib Akhtar On Misbah And Waqar’s Resignation (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது. டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அதற்காக மற்ற அணிகளை போல பாகிஸ்தான் அணியும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா பொறுப்பேற்கும் நிலையில், இவர்கள் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். மேலும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகியது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending


இவர்கள் தங்களது பதவிலிருந்து விலகிய உடனேயே, நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பயிற்சியாளர்களாக சக்லைன் முஷ்டாக்கும், அப்துல் ரசாக்கும் நியமிக்கப்பட்டனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அரசியலை வெளிப்படையாக காட்டியது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் ஷோயப் அக்தர், “ரமீஸ் ராஜா தங்களை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்கவிட வாய்ப்பே இல்லை என்று கருதியதால், அவர்கள் விலகியிருக்கக்கூடும். அவர்கள் இருவரும் விலகியதன் மூலம், அவர்களின் பாதுகாப்பற்ற நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உங்களை(மிஸ்பா மற்றும் வக்கார்) பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிடும் என்று கருதினால், அதை அவர்களை செய்யவிட வேண்டுமே தவிர, நீங்களாக ஓடக்கூடாது. 

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

டி20 உலக கோப்பையில் உங்களது 100% உழைப்பை கொடுத்துவிட்டு அதன்பின்னர் தான் விலகியிருக்க வேண்டும். அதற்குள்ளாக எதற்கு ஓட வேண்டும்..?” என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்தானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement