Advertisement

கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

Advertisement
கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 02, 2025 • 01:53 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 02, 2025 • 01:53 PM

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களையும், நமன்திர் 27 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கும், ஜோஷ் இங்கில் 38, நெஹால் வதேரா 48 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களீல் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

ஆடம் கில்கிறிஸ்டின் சாதனை முறியடிப்பு

இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 8 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரின் நாக் அவுட் போட்டியில் கேப்டனாக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2009ஆஅம் ஆண்டு டெக்கன் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஆடம் கில்கிறிஸ்ட் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் 5 சிக்ஸர்களை அடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் அதனை முறியடித்துள்ளார். 

ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த கேப்டன்

  • 8* - ஷ்ரேயாஸ் ஐயர் vs மியன்மார், 2025
  • 5 - ஆடம் கில்கிறிஸ்ட் vs டிசி, 2009
  • 5 - கேஎல் ராகுல் vs ஆர்சிபி, 2022
  • 5 - எம்எஸ் தோனி vs மும்பை இந்திய்ன்ஸ், 2013

கிளென் மேக்ஸ்வெல்லின் சாதனையும் முறியடிப்பு

நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் மொத்தமாக 39 சிக்ஸர்களை விளாசிவுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரே சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 36 சிக்சர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனையும் ஸ்ரேயாஸ் முறியடித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

  • 39* - ஷ்ரேயாஸ் ஐயர், 2025
  • 36 - க்ளென் மேக்ஸ்வெல், 2013
  • 34 - கிறிஸ் கெய்ல், 2019
  • 34 - லியாம் லிவிங்ஸ்டோன், 2022
  • 32 - கேஎல் ராகுல், 2018

முதல் ஐபிஎல் கேப்டன்

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளின் கேப்டனாக செயல்பட்டதுடன், தான் தலைமை தாங்கிய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் வீரர் எனும் சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். உண்மையில், ஸ்ரேயாஸ் தலைமையில், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் கேகேஆர் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement