Advertisement
Advertisement
Advertisement

இறுதிப்போட்டி நிச்சயம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக அமையும் - சச்சின் டெண்டுல்கர்!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 28, 2023 • 23:04 PM
Shubman Gill batted well for MI: Sachin Tendulkar!
Shubman Gill batted well for MI: Sachin Tendulkar! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குறித்து முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், “இந்த சீசனில் ஷுப்மன் கில், செயல்பாடு மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக அவருக்கு அமைந்திருக்கிறது. அதுவும் அவர் கடைசியாக அடித்த இரண்டு சதம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சதம் மும்பையின் ஃபைனல் கனவை தகர்த்து விட்டது. மற்றொரு சதமும் எதிரணியின் வெற்றி வாய்ப்பை நசுக்கிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் இயற்கையே இதுதான். நாம் எதையும் கணிக்க முடியாது. 

Trending


ஷுப்மன் கில் பேட்டிங்கில் பிரமாதமான பொறுமையும், அமைதியான மன நிலையிலும், ரன்களுக்கான வேட்கையும், ஓடி ரன்கள் எடுப்பதற்கான முனைப்பையும் காட்டி வருகிறார். இதுபோன்ற மிகப்பெரிய போட்டிகளில் சுப்மன் கில்லின் இந்த பழக்கம் தான் முடிவை நமக்கு சாதகமாக கொடுக்கும். மும்பைக்கு எதிரான போட்டியில் கூட ஷுப்மன் கில் 12ஆவது ஓவரிலிருந்து வேற லெவலில் விளையாடி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி கொண்டு சென்றிருப்பார். 

இது நிச்சயம் சுப்மன் கில்லின் திறமையை காட்டுகிறது. நேற்றைய ஆட்டத்தில் கூட சமி ஓவரின் திலக் வர்மா 24 ரன்கள் அடித்தார். மேலும் சூர்யகுமார் ஆட்டம் இழக்கும் வரை போட்டி உயிரோட்டமாக இருந்தது. இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை குஜராத் தான் மிகவும் பலமான அணியாக விளங்குகிறது. சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகிய மூன்று வீரர்களின் விக்கெட்டை வீழ்த்துவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இதேபோன்று சென்னை அணியின் பேட்டிங்கும் பலமாக இருக்கிறது.

 

தோனி போன்ற வீரர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இறங்குகிறார் என்றால் அந்த அணியின் பேட்டிங் எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இன்றைய ஆட்டத்தில் எந்த அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது என்பது பொறுத்து வெற்றி அமையும். இன்றைய இறுதிப்போட்டி நிச்சயம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை” என சச்சின் குறிப்பிட்டிருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement