
Siraj should have played instead of Ishant Sharma in England Series (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்ததை அடுத்து பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய வீரர்களில் சில வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வந்தது. ஆனால் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற 3 வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியைத் தவிர மற்ற இருவரும் சோபிக்க தவறினர். அதிலும் குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு படு மோசமாக இருந்ததால் அவர் மீது அதிக அளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன.