
Skipper Rohit Disappointed With The Way Hardik, Rishabh Threw Their Wickets Against Pakistan (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து பவர்ப்ளே 6 ஓவரில் 62 ரன்களை குவித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் கோலி மட்டுமே பொறுப்புடன் ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் (60) அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பியதால் இந்திய அணியின் ஸ்கோர் பெரிதாக உயரவில்லை. ஆனால் கோலியின் பொறுப்பான அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.