
SMAT 2021 Final: Tamil Nadu restricted Karnataka by 151 runs (Image Source: Google)
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரர் ரோஹன் கதம் ரன் ஏதுமின்றி சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அடுத்து வந்த கேப்டன் மனீஷ் பாண்டே, கருண் நாயர், பரத் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, கர்நாடக அணியின் ரன் வேகம் ஆமை வேகத்தில் நகர்ந்தது.