
SMAT 2022: Tamil Nadu defeat Chandigarh by 61 runs (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று லக்னெளவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் அஜிதேஷ் ஒரு ரன்னுடனும், ஹரி நிஷாந்த் 26 ரன்னுடனும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்க வில்லை.