
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் - ஆந்திரா இடையே ஆன கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரன் சிங் முதல் சில ஓவர்களில் டி20 போட்டிக்கு உரிய வேகத்தில், ஒரு ஓவருக்கு 8 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்தனர். இதில் பிரப்சிம்ரன் சிங் 21 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த நமன் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் அதிரடி வீரர் அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் 13ஆவது ஓவரில் இருந்து அதிரடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றனர். ஆந்திரா அணியின் எந்த பந்துவீச்சாளரும் சரியில்லை என்பதை உணர்ந்த அந்த ஜோடி ஓவருக்கு 20 ரன்கள் என்ற இலக்கோடு பவுண்டரிகளாக அடிக்கத் தொடஙினர்.