
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது காலிறுதிச்சுற்றில் உத்திர பிரதேஷம் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய உத்திர பிரதேஷ அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கரண் சர்மா 14 ரன்களிலும், அபிஷேக் கோஸ்வாமி 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் நிதிஷ் ராணாவும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சமீர் ரிஸ்வி - ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 77 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய சமீர் ரிஸ்வி ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது.