
So much to learn from this defeat, don't know if wicket changed drastically: Rahul (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரிலுள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 296 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 265 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய கே.எல்.ராகுல், “நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக தான் பவுலிங் செய்தோம். மிடில் ஆர்டரில் தான் பெரும் சொதப்பல் நடந்துவிட்டது. மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வோம். பேட்டிங்கிலும் மிடில் ஆர்டர் தான் எங்களுக்கு பிரச்சினையே இருந்தது.