ஐசிசி கிரிக்கெட் குழு தலைவராக சௌரவ் கங்குலி!
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பணியாற்றினார். அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அப்பதவிக்கு பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி தேர்வாகியுள்ளார்.
கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஐசிசி கிரிக்கெட் குழு தீர்மானித்து வருகிறது. கங்குலியின் அனுபவம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
Also Read: T20 World Cup 2021
கடந்த 9 வருடங்களாக டிஆர்எஸ், விதிமுறையை மீறிய பந்துவீச்சு உள்பட பல முக்கியமான முடிவுகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே முன்னேற்றம் ஏற்படுத்தினார் என்று ஐசிசி தலைவர் கிரேக் பார்கிளே கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now