
இந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதேசமயம் வரும் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், இந்திய தேர்வு குழு வெளியிட்ட 17 பேர் கொண்ட அணியிலிருந்து முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி, ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளார்.
தனது அணியை வெளியிடுவதற்கு முன்பாக பேசிய அவர் “அக்சர் படேலை அவர் பேட்டிங் செய்யும் திறன் காரணமாக சாஹலுக்கு முன்னே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். எனவே இது ஒரு நல்ல தேர்வு என்று நான் நினைக்கிறேன். யாராவது காயம் அடைந்தால் சாஹல் அணிக்குள் வர முடியும். இது 17 பேர் கொண்ட அணி எப்படியும் இரண்டு பேரை வெளியேற்றி ஆகவேண்டும்.