
இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த 2019ஆம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய பொறுப்பால் முதலில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், போக போக அதிருப்தி அடைந்தனர். கங்குலியின் தலையிட்டால் தான் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதே போன்று பிசிசிஐ தந்த அழுத்தத்தால் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து கங்குலி விலக, பிறகு ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகினார். இதனால் கங்குலி மீது கோலி ரசிகர்கள் கடும் கோபம் பட்டு ட்விட்டரில் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், கங்குலி வெளியிட்டுள்ள ஒரு டிவிட், ரசிகர்களிடையே குழப்பததை ஏற்படுத்தியுள்ளது. அதில், கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து இதோடு 30 வருடம் ஆகிறது. 30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளிக்க மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை துவங்க போகிறேன். நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்