
இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பின், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இவருக்கு பின் யார் இந்திய அணியின் அடுத்த புதிய டி20 கேப்டன் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறுகையில், “கோலி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து. இவர் இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளிலும் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்களில் ஒருவர், கோலியின் இந்த முடிவு எதிர்காலத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
கோலி டி20 கேப்டனாக இதுவரை சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், அதுமட்டுமின்றி வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், வரும்காலங்களில் அவர் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.