Advertisement
Advertisement
Advertisement

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் சௌரவ் கங்குலி!

பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வுசெய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 16, 2022 • 12:28 PM
Sourav Ganguly to contest for CAB President's post
Sourav Ganguly to contest for CAB President's post (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவந்தார். சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

பிசிசிஐ தலைவர், செயலாளர் ஆகிய பதவிக்காலம் முடிவடையும் நிலையில், வரும் 18ஆம் தேதி மும்பையில் நடக்கும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பிசிசிஐ செயலாளராக இருக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா அந்த பதவியில் மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளார். ஆனால் தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

Trending


இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். எனவே அவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.  

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கால நிறைவு குறித்து பேசிய சௌரவ் கங்குலி, “பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராக 5 ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். பிசிசிஐ தலைவராகவும் இருந்திருக்கிறேன். இந்த பதவிகளிலிருந்தெல்லாம் விலகித்தான் ஆகவேண்டும். நிர்வாக பொறுப்பில் இருந்து, அணியின் நலனுக்காக சிறப்பான பங்களிப்பை மட்டுமே நாம் அளிக்க வேண்டும். ஒரு வீரராக இந்திய அணியில் நீண்டகாலம் ஆடியிருக்கிறேன். ஒரு நிர்வாகியாகவும் எனது பணியை சரியாக செய்தேன். எல்லா காலத்துக்கும் ஆடிக்கொண்டே இருக்க முடியாது. அதுபோலத்தான், ஒரு நிர்வாகியாகவும்.. ஒரு கட்டத்தில் ஒதுங்கித்தான் ஆகவேண்டும்.

நான் இந்தியாவிற்காக ஆடிய காலம் தான் இனிமையான காலம். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். அதற்கு பின் எவ்வளவோ பார்த்துவிட்டேன். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர், பிசிசிஐ தலைவர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டேன். எதிர்காலத்தில் இன்னும் சிறந்த பொறுப்புகளை வகிக்கவுள்ளேன். ஆனால் நான் இந்தியாவிற்காக ஆடிய அந்த 15 ஆண்டுகள் தான் பொற்காலம்” என்று தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் பதவி காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைகிறது. பதவி நீட்டிப்பை எதிர்பார்த்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கங்குலி மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் வருகிற 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். 'பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் நான் 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளேன். லோதா கமிட்டி விதிமுறைப்படி மேலும் 4 ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும்' என்று கங்குலி குறிப்பிட்டார். அவர் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement