-mdl.jpg)
Sourav Ganguly was great captain, knew how to maintain balance: Sachin Tendulkar (Image Source: Google)
பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நாளை தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி இப்போதிருந்தே பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கங்குலியை குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர், ''இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி. வீரர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கும், அவர்களுக்கு சில பொறுப்புகளை வழங்குவதற்கும் இடையே சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது அவருக்குத் தெரியும்.
கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, இந்திய கிரிக்கெட் ஒரு மாறுதல் கட்டத்தில் இருந்தது. எங்களுக்கு அடுத்த கட்ட வீரர்கள் தேவைப்பட்டனர். இந்திய அணியை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரு தளம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.