
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியானது முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் லாரா வோல்வார்ட் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மரிஸான் கேப் 14 ரன்களுக்கும், அதிரடியாக விளையாட முயன்ற சுனே லூஸ் 27 ரன்களையும் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்களையும், சோலே ட்ரையான் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சதிய இக்பால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டார் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.