
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கடைசி வார லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது. இந்த நிலையில் இதுவரை எந்த ஒரு அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. ஆனால் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் எஞ்சிய இரண்டு இடத்தை பிடிக்கப் போகும் அணி எது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல விவாதங்கள் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் தங்களுடைய வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அரை இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்கள் பிடிக்கும் அணி முதல் அரையிறுதியிலும், புள்ளி பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் பிடிக்கும் அணி இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மோதும்.
அந்த வகையில் தற்போது பல முன்னாள் வீரர்கள் எந்த அணி இறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறித்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் ஜாக் காலிஸ் மூன்று அணிகளுக்கு இம்முறை அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.