இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான தெற்கு மண்டல அணியும், சௌரவ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டல அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தெற்கு மண்டல அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தெற்கு மண்டல அணிக்கு குன்னுமால் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 63 ரன்களில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 13 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் ராயுடுவும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குன்னுமால் சதமடித்து அசத்தினார். பின் 54 ரன்களில் ரோஹித்தும், 107 ரன்களில் குன்னுமாலும் விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.