
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் இந்தாண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்படலாம் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் உலகக்கோப்பைக்கு தயாராகும் வெளிநாட்டு வீரர்கள் இதில் பங்கேற்பதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஸ்லே கில்ஸ் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல்-ஐ புறம் தள்ளிவிட்டு சொந்த நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இது மறைமுகமாக வீரர்களுக்கு ஐபிஎல்-ல் பங்கேற்க கூடாது என அழுத்தம் கொடுத்தது.
இந்த அதிர்ச்சி செய்தியின் தாக்கம் பிசிசிஐயிடம் குறையாத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி வந்துள்ளது. ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டால் நியூசிலாந்து வீரர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.