
Sri Lanka Cricket Grants NOCs To Hasranga, Chameera To Play In IPL 2021 (Image Source: Google)
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்க முடியாத வீரர்களுக்கான மாற்று வீரர்களையும் ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்துவருகின்றனர். இதில் ஆர்சிபி அணி ஆடம் ஸாம்பா மற்றும் டேனியல் சம்ஸிற்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வாநிந்து ஹசரங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க என்ஓசி எனப்படும் வீரர்களுக்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று வழங்கியுள்ளது. இதன் மூலம் நடப்பு சீசனில் இந்த இரு வீரர்களும் ஆர்சிபி அணிக்காக விளையாடுவது உறுதியாகிவிட்டது.