-mdl.jpg)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் போராடி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்தியதோடு, தொடரையும் சமன் செய்தது.
இந்நிலையில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கமுன்ஹுகாம்வே - எர்வின் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் எர்வின் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, கமுன்ஹுகாம்வே 12 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் வந்த பிரையன் பென்னெட் 29 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 15 ரன்களையும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 14.1 ஓவர்களி ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் கேப்டன் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.