
Sri Lanka need to play fearless cricket to win matches, says ODI skipper Kusal Perera (Image Source: Google)
இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் தாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இந்த அணியில் அனுபவ வீரர்களான தினேஷ் சண்டிமல், திமுத் கருணரத்னே, ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குசால் பெரேரா கேப்டனாகவும் குசால் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய கேப்டன் குசால் பெரேரா, கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.