
Stand-in skipper KL Rahul explains reason behind India's 7-wicket defeat against South Africa (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் தற்போது (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இதன்காரணமாக 11ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற சுவாரஸ்யமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல் தோல்வி குறித்து பேசுகையில், “ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி விளையாடுகிறோம். மேலும் அதற்கான கடின உழைப்பையும் களத்தில் அளித்து வருகிறோம்.