
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது செப்டம்பர் 23ஆம் தேதி இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருந்தது. வழக்கம் போல 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இன்று நாக்பூர் நகரில் பலத்த மழை பெய்தது.
அதன் காரணமாக போட்டியானது டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. பின்னர் 7 மணிக்கு மைதான ரிப்போர்ட் வெளியாகிய பின்னர் மைதானத்தின் அவுட் ஃபீல்ட் ஈரப்பதமாக இருப்பதனால் 8 மணிக்கு மீண்டும் மைதானம் பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பிறகு போட்டி தொடங்குவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.