
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காஅ அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்த போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.