
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் இரண்டாவது டெஸ்டில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியா மண்ணைக் கவ்வியது. முதல் டெஸ்டுக்கு பிறகு நடந்த எந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டார். அதிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுலின் கேப்டன்சி குறித்து பேசிய கவாஸ்கர், "பார்ட்னர்ஷிப் இருக்கும் போதெல்லாம் கே.எல்.ராகுலுக்கு எந்தவொரு யோசனைகளும் இல்லை.செய்வதறியாமல் திகைத்தார். பார்ட்னர்ஷிப் இருக்கும்போது, சில சமயங்களில் கேப்டன் தடுமாறுவார்கள். அதுதான் ராகுலுக்கும் நடந்தது என்று நினைக்கிறேன். பேட்டிங் செய்வதற்கு தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் மிகவும் நன்றாக இருந்தது.