Advertisement
Advertisement
Advertisement

தொடரிலிருந்து வெளியேறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!

ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் வீரர்களுகான கட்டணத்தில் அணியின் உரிமையாளர்கள் கழித்தம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement
தொடரிலிருந்து வெளியேறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
தொடரிலிருந்து வெளியேறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2024 • 03:58 PM

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் இத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2024 • 03:58 PM

இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியும் இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Trending

அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகும் வீரர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  “விளையாட்டு வீரர்கள் எப்போதுமே தங்களது நாட்டிற்காக விளையாடுது தான் முதன்மையானது. அதற்கான முக்கியத்துவத்தை வீரர்கள் கொடுக்க வேண்டும். அதனை நானும் ஏற்கிறேன். ஆனால் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடும் வீரர்கள் தொடர் முழுவது விளையாடுவதாக உறுதியளித்துவிட்டு, பின்னர் அதிலிருந்து பாதியிலேயே விலகுவது என்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

மேலும், வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்காக விளையாடும் தொகையைவிட, ஐபிஎல் தொடரில் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.  இந்த மாதிரியான சூழலில் அணியின் உரிமையாளர்கள் வீரர்களுக்கான கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட கட்டணத்தை கழித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அதோடு இந்த விவகாரத்தில் தங்கள் வீரரை அனுப்பிவிட்டு, பின்னர் அழைத்துக் கொண்ட வாரியத்துக்கு அபராதம் விதிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement