
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் நாம் வழக்கமாக எதிர்பார்த்த எல்லா வீரர்களுமே இடம் பெற்று இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல்ராகுல் இருவரும் உடற்தகுதிப்பெற்று அணிக்குத் திரும்பி இருக்கிறார்கள். யுஸ்வேந்திர சஹால் மட்டும் நீக்கப்பட்டு, புதுவீரராக திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அணியில் 18ஆவது வீரராக சஞ்சு சாம்சன் அணி உடன் பயணம் செய்கிறார். கே எல் ராகுலுக்கு காயம் முழுவதுமாக குணமடைந்து இருந்தாலும், கொஞ்சம் நிக்கில் இருப்பதால், ஒருவேளை தொடருக்கு முன் சரியாகாவிட்டால், முன்னெச்சரிக்கையாக சஞ்சு சாம்சன் பயணம் செய்கிறார். ஆசியக் கோப்பை முடிந்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் முறையாக முழுமையாக நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “பேட்டிங் ஆர்டரில் எந்த அணியும் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் நான் டாப் ஆர்டரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ரோஹித் சர்மா கீழே விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. புதிய பந்தில் நிறைய சேதாரங்கள் உருவாகும் பொழுது, அதைக் கட்டுப்படுத்த நமக்கு நான்காம் இடத்தில் விளையாட விராட் கோலி இருக்கிறார். ஒவ்வொரு முறை இந்தியா தோற்ற பொழுதும் புதிய பந்தில் 10 முதல் 12 ஓவரில் முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால்தான் தோற்று இருக்கிறது.