
Sunil Gavaskar Highly Impressed With 'Renewed Energy' of This IPL Team (Image Source: Google)
கரோனா வைரஸின் 2ஆவது அலை வேகமாக பரவியதை அடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தோடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சிகளை செய்து வருகிறது.
ஒருவேளை ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தான் கோப்பையை வெல்லும் என இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு பெரும் ஏமாற்றமளித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தாண்டு எழுச்சிப் பெற்று, இத்தனை ஆண்டுகளாக வலம் வந்த ஒரு சாம்பியன் அணியாகவே வந்துவிட்டது. அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல், இந்த முறை தனது ஆற்றலை புதுப்பித்து வந்திருக்கிறது. மொயீன் அலியை மூன்றாவது வீரராக களமிறக்கியது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.