ஐபிஎல் 2025: கிளாசென், கம்மின்ஸ், அபிஷேக்கை தக்கவைக்கிறதா சன்ரைசர்ஸ்?
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசன், பாட் கம்மின்ஸ் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரை தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தக்கவைத்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில், ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசனை ரூ. 23 கோடிக்கு முதல் வீரராகவும்,பாட் கம்மின்ஸ் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முறையே ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடிக்கும் தக்கவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி அகியோரையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Travis Head & Nitish Kumar Reddy are likely to be the other 2 retentions!#CricketTwitter #SRH #sunrisershyderabad #Klassen #AbhishekSharma #PatCummins #TravisHead #NitishKumarReddy pic.twitter.com/5hx3QwYIDO
— CRICKETNMORE (@cricketnmore) October 16, 2024
இதன்மூலம் அந்த அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைக்கவுள்ளதாகும், மிதம் இருக்கும் ஒரு இடத்தை ஆர்டிஎம் முறையில் தேர்வுசெய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படை அந்த அணி தக்கவைத்துள்ளதாக கூறப்படும் வீரர்கள் அனைவரும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிரடியான தொடக்கத்தை கொடுத்து எதிரணி பந்துவீச்சாளர்களை அழுத்ததிற்கு உள்ளாக்கினர். அவர்களுடன் ஹென்ரிச் கிளாசென் 15 இன்னிங்ஸ்களில் 171.07 என்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் 479 ரன்களைக் குவித்தார். அவர்களுடன் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரும் தங்கள் ஆல் ரவுண்டர் திறனை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now