
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஜாம்பவான்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக்கிற்கு டாடா சொல்லிவிட்டு, மற்ற நாட்டு கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா, 2022 மெகா ஏலத்தில் அணிகளின் எண்ணிக்கை 8 முதல் 10 ஆக அதிகரித்த போதிலும் விற்கப்படாமல் போய்விட்டார்.
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ரெய்னா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் (யுபிசிஏ) ஆகியோரிடம் பேசியுள்ளார். உண்மையில், ரெய்னா ஏற்கனவே தனது மாநிலத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்து, யுபிசிஏ விடம் இருந்து என்ஓசி எடுத்துள்ளார்.