-mdl.jpg)
டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. பிரதான சுற்று போட்டி அக்டோபர் 23ஆம் தேதிதான் தொடங்கும் என்பதால், இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக இந்திய அணி, மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி டி20 போட்டியில் விளையாடினார்கள். கோலி, கேஎல் ராகுல், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் வீரர்களாக ரோஹித் சர்மாவுடன், ரிஷப் பந்த் இருந்தார்.
மேற்கு ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெக்ரென்டர்ப், ஆண்ட்ரூ டை, மேத்யூ ஹெல்லி போன்ற அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வேகத்திற்கு சாதகமான அந்த பிட்சில் ரோஹித் ஷர்மா 3 ரன்களும், ரிஷப் பந்த் 9 ரன்களும் எடுத்து நடையைக் கட்டினார்கள்.