
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி கைல் மேயர்ஸின் அரைசதம் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையரின் கேமியோவின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களை அதிரடியாக எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட முதுகு பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பியது ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை சேர்த்தார்.