
டி20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 சுற்று இன்றுடன் நிறைவுபெற உள்ளது.டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஜிம்பாப்வே அணி களமிறங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டதால், இப்போட்டியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை என்ற மனநிலையுடன் களமிறங்கி, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய தொடக்க வீரர்கள் இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், இன்று அதிரடியாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. ரோஹித் ஷர்மா 15 ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். ரோஹித் 5 போட்டிகளிலும் 13 சராசரியுடன் 52 ரன்களை மட்டுமே பவர் பிளேவில் சேர்த்திருக்கிறார். அதில் 4 முறை ஆட்டமிழப்பும் இருக்கிறது. ஒரேயொரு போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக மட்டுமே பவர் பிளேவை தாண்டி விளையாடியிருக்கிறார்.
மற்றொரு வீரர் கேஎல் ராகுல் கடந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் வங்கதேசத்திற்கு அரை சதம் அடித்ததுமே ஆட்டமிழந்த அவர், தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிராகவும் 51 அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.