Advertisement
Advertisement
Advertisement

பயிற்சியின் போது காயமயடைந்த சூர்யா, இஷான் கிஷன் - இந்திய அணிக்கு பின்னடைவு!

நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 21, 2023 • 20:52 PM
பயிற்சியின் போது காயமயடைந்த சூர்யா, இஷான் கிஷன் - இந்திய அணிக்கு பின்னடைவு!
பயிற்சியின் போது காயமயடைந்த சூர்யா, இஷான் கிஷன் - இந்திய அணிக்கு பின்னடைவு! (Image Source: Google)
Advertisement

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நடப்பு உலகக்கோப்பை தொடரில்  இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் இந்திய அணி தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நாளை தர்மசாலாவில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. 

இந்நிலையில் கடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் போது காயமடைந்த ஹார்டிக் பாண்டியா நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் ஹார்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Trending


ஹார்திக் பாண்டியாவின் இடத்திலேயே மாற்று வீரராக இடம்பெறப்போவது யார்? என்பது குறித்த கேள்வி அதிகரித்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு முக்கிய ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலேயே காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே அறுவைசிகிச்சை பெற்றுக்கொண்ட இடத்திலேயே தற்போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளதால் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் நாளைய போட்டியில் அவர் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவரைத்தாண்டி நாளை ஹர்திக் பாண்டியா இடத்தில் விளையாட இருந்த சூர்யகுமார் யாதவ் வலைபயிற்சியின் போது காயமடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

அதிலும் குறிப்பாக அவரது மணிக்கட்டு பகுதியில் பந்து தாக்கியுள்ளதால் அவர் நாளைய போட்டியில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மற்றொரு வீரரான இஷான் கிஷனும் தேனீ கடியில் சிக்கியதால் பயிற்சியிலிருந்து வெளியேறினர். இதனால் நாளைய போட்டியில் எந்த வீரர் ஹர்திக் பாண்டியா இடத்தில் விளையாடுவார் என்ற சந்தேகம் வழுத்துள்ளது.   


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement