Advertisement

நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது; வாழ்த்திய பிசிசிஐ!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு இன்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 27, 2021 • 19:23 PM
T Natarajan Undergoes Knee Surgery, Says Looking Forward To Come Back Stronger And Fitter
T Natarajan Undergoes Knee Surgery, Says Looking Forward To Come Back Stronger And Fitter (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான நடராஜன் தங்கராசுவுக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை நல்லபடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய அவர் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். அறுவை சிகிச்சை தான் அவரது காயத்திற்கு தீர்வு என மருத்துவர்கள் ஆலோசனை கூறிய காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Trending


இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பதிவில் “இன்று எனக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கவனத்துடன் மிக கனிவாக பழகி எனக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. பிசிசிஐ-க்கும் எனது நன்றிகள். நான் பூரண குணம் பெற வேண்டி எண்ணை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். 

நடராஜனின் ட்விட்டர் பதிவிற்கு பிசிசிஐ, “விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். கூடிய விரைவில் பழையபடி உங்களை களத்தில் காண காத்திருக்கிறோம்” என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.     


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement