
T20 WC 39th Match:England shatter South Africa's semi - final dream! (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ரஸ்ஸி வென்டெர் டூசென், ஐடன் மார்க்ரம் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வென்டர் டுசென் 94 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 52 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 131 ரன்னில் இங்கிலாந்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.