Eng vs sa
இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் - நாசர் ஹூசைன்!
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இது இங்கிலாந்தின் மூன்றாவது தோல்வி இதுவாகும்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்கள். இங்கிலாந்து அணியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று மாற்றங்கள் அவர்கள் வழக்கமாக விளையாடுவதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது.