
அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பெரிய அணிகளையெல்லாம் வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது இலங்கை அணி. ஆசிய சாம்பியனான இலங்கை அணி மீது டி20 உலக கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் பெரிய அணியான இலங்கை, டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாமல் தகுதிப்போட்டியில் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. ஆனால் நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்வதால் எளிதாக இந்த 3 அணிகளையும் இலங்கை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி 20 ஓவரில் 163 ரன்களை குவித்தது. இலங்கை அணியின் 3 ஃபாஸ்ட் பவுலர்களான துஷ்மந்தா சமீரா 39, பிரமோத் மதுஷன் 37 மற்றும் சாமிகா கருணரத்னே 36 ஆகிய மூவருமே அதிக ரன்களை வாரி வழங்கினர். டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்கினர்.