-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் ஃபீல்டிங் செய்வதாக தீர்மானித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை களமிறங்கியது. இருவரும் அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கினாலும் முதல் சில ஓவர்களிலேயே தடுமாற தொடங்கினர். இதன் விளைவாக 15 ரன்கள் எடுத்திருந்த முகமது ரிஸ்வான் சாம் கரன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.