
T20 World Cup 2022: Pakistan are through to the semis! (Image Source: Google)
டி20 உலக கோப்பை போட்டியில் குரூப்-1 பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப்-2 பிரிவில் இருந்து இந்தியா தகுதி பெற்றுவிட்டது.
குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் டில் தொடங்கியது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் இரு அணிகளும் களம் இறங்கின.
இப்போட்டியில் டாஸ் ஜெயித்த வங்காள தேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நஜ்முல் ஹாசைன் சாந்டோ களம் இறங்கினர். லிட்டன் தாஸ் 10 ரன்னில் ஷகின்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து சவுமியா சர்கார் களம் வந்தார். நஜ்முல் ஹாசைன் சிறப்பாக விளையாடி ரன்னை சேர்த்தார்.