
T20 World Cup 2022: Shoaib Akhtar makes explosive statement against Team India (Image Source: Google)
டி20 உலக கோப்பையில் பி பிரிவிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டியில் வென்று முதல் இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான அணி இன்னும் புள்ளிக் கணக்கு தொடங்காமல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது .
இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியதற்கு அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் தேர்வு சரி இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் தோற்றால் பாகிஸ்தான் அணியை விமர்சிப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அந்நாட்டின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தேவையில்லாமல் இந்தியாவை விமர்சித்து பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.