
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் மிகச்சிறப்பாக விளையாடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெர்த்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் நிதானமாக தொடங்கினர். ராகுல் முதல் ஓவர் முழுக்க ஆடி ஒரு ரன் கூட அடிக்கவில்லை. முதல் ஓவர் மெய்டன் ஓவர் ஆனது. இரண்டாவது ஓவரில் ரோஹித் அபாரமாக ஒரு சிக்ஸர் அடிக்க, 3ஆவது ஓவரில் ராகுலும் அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்தார்.