1-mdl.jpg)
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவிச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சான் மசூத் 38 ரன்களும், பாபர் அசாம் 32 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சாம் கர்ரான் 3 விக்கெட்டுகளையும், அடில் ரசீத் மற்றும் கிரிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்தி தேவையான ரன்களை எடுத்தாலும், மிடில் ஓவர்களில் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.