பாகிஸ்தான் இன்னும் தொடரில் இருந்து வெளியேறவில்லை - சாகித் அஃப்ரிடி!
இந்தியாவிற்கு எதிராக எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியுள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![T20 World Cup: Pakistan Missed Out On A Huge Opportunity To Beat India, Says Shahid Afridi பாகிஸ்தான் இன்னும் தொடரில் இருந்து வெளியேறவில்லை - சாகித் அஃப்ரிடி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/t20-world-cup-pakistan-missed-out-on-a-huge-opportunity-to-beat-india-says-shahid-afridi-lg-lg.jpg)
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியிலும் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Trending
அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வானும் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் பாகிஸ்தான் அணி மீதான விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில், இந்தியாவிற்கு எதிராக எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியுள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு நிலைத்தன்மை, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் களத்தில் அணுகுமுறை தான்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை வெறுமனே கிளிக் செய்யவில்லை, நாங்கள் பார்த்தது பவர் ஹிட்டிங்கின் பலவீனமான காட்சி. பல காரணங்களால், இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடவில்லை. ஆனாலும் சேஸிங்கின் போது இலக்கை எட்ட பாகிஸ்தான் அணிக்கு உக்தியும், ஸ்மாட் கிரிக்கெட்டும் தேவைப்பட்டது. ஆனால் அந்த குணங்கள் பாகிஸ்தான் அணியிடம் இல்லை.
இதன்மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான எட்டு போட்டிகளில் இந்தியா அணி ஏழு வெற்றிகளை பதிவுசெதுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேர்மையாக கூற வேண்டும் எனில் 120 ரன்கள் என்பது எளிதாக எட்டக்கூடிய இலக்கு தான். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு குறைந்த ஸ்கோரை சேஸிங்கில் தடுத்து நிறுத்தியது கிடையாது.
பாகிஸ்தானின் பந்துவீச்சு ஒழுக்கமானதாக இருந்தது. ஆனால் எதிரணி உலகின் சிறந்த பேட்டிங் வரிசை என பேசப்பட்ட வீரர்களை வெறும் 119 ரன்களுக்கு கட்டுப்படுத்தியுள்ளதை மறுத்துவிட முடியாது. இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் சில கடினமான தேர்வுகள் வர உள்ளன. ஆனாலும் இன்னும் பாகிஸ்தான் மீது நம்பிக்கை உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் பாகிஸ்தான் இன்னும் தொடரில் இருந்து வெளியேறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now