
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின. ஆஸ்திரேலியின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி பெரிதாக ரன்னும் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சியான் வில்லியம்ஸ் 31 ரன்களும், கிராய்க் எர்வீன் 19 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், ஷாதப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை விட பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் சான் மசூத் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.