
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 32, ஷான் மசூத் 38 , சதாப் கான் 20 ஆகியோர் ஓரளவுக்கு பெரிய ஸ்கோர் அடித்தனர். அடுத்து முகமது ரிஸ்வானை 15 தவிர்த்து யாரும் இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 137/8 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர் ஜாஸ் பட்லர் 26, அலேக்ஸ் ஹேல்ஸ் 1 , பிலிப் சால்ட் 10 ஆகியோர் பவர் பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். அடுத்து ஹேரி ப்ரூக்ஸ் 20, மொயின் அலி 19 ஆகியோர் பென் ஸ்டோக்ஸுடன் 52 பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 138/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது.