
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் 35ஆவது போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கி விளையாடியது.
வங்கதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைபட்டது. பின்னர், மழைநின்றதையடுத்து சில நிமிட இடைவெளிக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால், ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டக்ஒர்த் லூயிஸ் விதிப்படி, வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில், ஏற்கனவே 7 ஓவரில் 66 ரன்கள் எடுத்திருந்ததால் இன்னும் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச அணி களமிறங்கியது.